Wednesday, 25 February 2015

பெண் மலரே - படித்ததில் பிடித்தது





சோற்றுப்பருக்கைச் செல்லமாய்ச்சிதைத்து - அதோடு

பசும்பால் தோய்த்து - விரலால்

ஊட்டுவாள் - அம்மா



ழங்களின் தோலுரித்து - அதைப்

பொடியாய் நறுக்கி - நசுக்கி

ஊட்டுவார் - அப்பா.


சா
ப்பிடுவது எதுவாயினும் - அதை

சத்தமில்லாமலெடுத்து - நாவால் ஊதி

ஊட்டுவார் - தாத்தா.


ரொட்டித்துண்டை நீரில் நனைத்து

அதனை அமுக்கி - குழைத்து

ஊட்டுவான் - அண்ணன்.



போதும் உறவுகளே !

இனியும் அவளுக்கு

ஊட்டி விடாதீர்கள்.



ல்லூறுகள் வல்லுறவுக் கொள்ளத்

துடிக்கும் தேசத்தில் - அவள்

தனியாகத்தான் வேட்டையாட வேண்டியிருக்கிறது - ஆதலால்

அவளுக்கு உண்ணக் கற்றுக்கொடுங்கள்;

ஊட்டி விடாதீர்கள்.

No comments:

Post a Comment