Sunday, 1 February 2015

திரும்பி வரும் வரை


kavithai



வீட்டிற்குள் நுழைந்தாலே

மனதை பிசையும் நியாபகங்கள் . . .


லைந்து கிடைக்கும் பொருள்களில்

சமையல் பாத்திரங்களில்

மீதமிருக்கும் விரல் தடயங்களில் . . .


ன்னதான் துவைத்தாலும்

சட்டையின்  காலரில்

அழுக்கு  போகத்தான் மறுக்கிறது . . .


தானே செய்யும் சமையலில்

உப்போ காரமோ அதிகமாவது

தவிர்க்கவே முடியவில்லை . . .


தூக்கமில்லா இரவுகளில்

நிலா பொம்மையும்

வாங்கி தந்த  முதல் சேலையும்

பக்கத்தில் ஆறுதல்  சொல்வது

தினசரி வாடிக்கையாகி விட்டது . . .


பிரியமானவர்களின் விசாரிப்பில்

"ஊருக்கு  போயிருக்கிறா " என்பது

உதடுகளுக்கு பழக்கமாகி விட்டது . . .


ப்போதெலாம் கைபேசியின்

உரையாடல்களில்தான்

அன்பு  தொடர்கிறது . . .


ள்ளங்கையில் ஏந்தியபடி

சிணுங்கும் குழந்தையின்

ரோஜாநிற உதடுகளுக்கு

கண்ணீரோடு முத்தமிடும்

அந்த அற்புத நிமிஷங்களுக்காக

சிலதை சகித்து கொள்ளத்தான்

வேண்டும் . . .


-பிரசவத்திற்கு  போன மனைவி 

திரும்பி வரும் வரை -

1 comment: