கூட்டத்தில் என் தோழிகளுடன்
குதூகலித்த என்னை. .
கை காட்டி . . இவள் தான் வேண்டுமென
என்னை அவன் கைகளில் ஏந்தினான். .
அவன் விரல்கள் இருக்கிய வேகத்தில்
உயிர் கரைய ஆரமித்தது. .
அவன் மார்பினில் சாய்ந்து
உலகை ரசிக்கும் வேலையில்
நான் உன்னை காதலிக்கிறேன்
என்றான் ஒருவளிடம்
என்னை அவன் மார்பிலிரிந்து
பிரித்து நீட்டிய வண்ணம். . .
சில நொடி வாழ்ந்து விட்டேன்
உன்னோடு இன்று என்று
அவன் கால்களுகிடையே
உதிர்ந்து உயிர் விடுத்தேன். . .
அவள் கைகளில் சேர விருப்பம் இல்லாமல். . !!
இப்படிக்கு
ரோஜா
