Thursday, 9 February 2017

நீ தான் . . . !!


தினமும் காலையில்

கண் விழித்திடும் வேளையில்

உணர்ந்திடும் சோம்பல் நீ தான் . .!


பேருந்திற்கு நடக்கும் பாதையில்

தினமும் பார்த்திடும்

மழலை சிரிப்பு நீ தான் . . !


செவிசிறையினில் அகப்பட்டு

முழங்கிடும் அத்தனை

பாடல் வரிகளின்

அர்த்தமும் நீ தான் . . !


யிரிழையினை உரசி

தேகம் சிலிர்த்திடும்

தென்றல் காற்றும் நீ தான் . . !


டைமழை முன்பு

எழும் மண்வாசனை

நினைவு கூர்வது நீ தான் . . !


டல் அலைகளின் ஆரவாரத்தை

தூரம் நின்று ரசித்திடும்

அந்திமாலை சூரியனும் நீ தான் . . !


ண் அசரும் இரவுவேளை

நினைவுகளால் கட்டி அணைக்கப்படும்

என் தலையணையும் நீ தான் . . !


கேளியில் புன்னகையாகவும்

நீ இல்லா வேளையில் கண்ணீராகவும்

வெளிப்படுவது நீ தான் . . !


ன் பெண்மையை உணரச்செய்யும் நளினமும்

என் பெண்மையால் வெளிப்படும்

நாணமும்  நீ தான் . . !


நான் எழுதும் கவிதையில்

எழும் கற்பனை

யாவும் நீ தான் . . !


பொறித்திடும் நாட்குறிப்பில்

எழுதும் வார்த்தைகளில்

நினைவு கூர்வும் நினைவுகளில்

என்று யாவிலும் நீ தான் . .

நீ தான் . . !