நான் உனதல்ல
நீ எனதல்ல
ஆயினும் ஏன் இந்த போராட்டம் . . . !!
ஒவ்வொரு முறையும்
உன் பெயரையே கிறுக்கி பழகிய
என் பேனா நுனி சொல்லும்
உன் பெயரின் எழுத்துக்களை மனப்பாடமாய் . .!!
என் தலையனை கணம் சொல்லும்
தினம் இரவில் நான் சிந்தும்
கண்ணீரின் ஆழத்தை . .!!
நான் அல்லாமல்
நீ மற்ற பெண்ணிடம் பேசும் தருவாயில்
கோபத்தை பொறுக்க முடியாமல்
இடிபடும் என் பற்கள்
சொல்லும் ஓராயிரம் கதைகள் . .!!
என் சுயமறியாதையை விற்று
ஒவ்வொரு சண்டையிலும்
வாக்குவாதங்களிலும்
முதலில் மன்றாடி
உன்னை எனக்காய் பெரும் தருணத்தில்
கண்ணீர் மல்க துடிக்கும்
என் உதடுகள் சொல்லும்
அதுபோல் கடந்து வந்த
ஆயிரம் தருணங்களை . .!!
உன் கை அசைவில்
உன் கை காப்பு சிணுங்கயில்
அது உன்னோடு ஒட்டி உறவாடும்
ஆணவத்தை கத்தி சொல்கிறது
என்று பொறாமை கொள்ளும்
என் மனதை எதை கொண்டு
கட்டி போடுவது . .!!
முதல் முதலாய்
அறியாமல் நீ என் ஸ்பரிசம்
தொட்ட நொடி . .
கண் இமைக்கும் நொடிகளில்
நீ பதித்த முதல் முத்தம் . .
உன்னுடன் நினைந்த முதல் மழை . .
முதல் காதல் பார்வை . .
கடல் அலையையும் காதலையும்
ஒன்றாக ரசித்த நிமிடங்கள் . .
கை பிடித்து ஒட்டி
நடந்த மாலை வேளை . .
இதை நினைத்து பார்க்க
தடையில்லை என் கனவுகளில் . .!!
காதல் உண்டு
கனவுகள் உண்டு
ஆசைகள் உண்டு
எதிர்பார்ப்புகள் உண்டு
உன்னோடு நான் வாழும் வாழ்க்கை
மட்டும் இல்லை . .
ஏன் . .
ஜாதிகளோடு மூச்சை விடும்
இந்த சராசரி மக்கள் கூட்டத்தில்
என்னையும் திணித்து
என் காதலை அதுக்கு இரையாக்கிய
கடவுளை எந்த காவலாளி
கொண்டு பிடித்து
எந்த சிறையில் அடைப்பேன் . .!!
நீ எனதல்ல
ஆயினும் ஏன் இந்த போராட்டம் . . . !!
ஒவ்வொரு முறையும்
உன் பெயரையே கிறுக்கி பழகிய
என் பேனா நுனி சொல்லும்
உன் பெயரின் எழுத்துக்களை மனப்பாடமாய் . .!!
என் தலையனை கணம் சொல்லும்
தினம் இரவில் நான் சிந்தும்
கண்ணீரின் ஆழத்தை . .!!
நான் அல்லாமல்
நீ மற்ற பெண்ணிடம் பேசும் தருவாயில்
கோபத்தை பொறுக்க முடியாமல்
இடிபடும் என் பற்கள்
சொல்லும் ஓராயிரம் கதைகள் . .!!
என் சுயமறியாதையை விற்று
ஒவ்வொரு சண்டையிலும்
வாக்குவாதங்களிலும்
முதலில் மன்றாடி
உன்னை எனக்காய் பெரும் தருணத்தில்
கண்ணீர் மல்க துடிக்கும்
என் உதடுகள் சொல்லும்
அதுபோல் கடந்து வந்த
ஆயிரம் தருணங்களை . .!!
உன் கை அசைவில்
உன் கை காப்பு சிணுங்கயில்
அது உன்னோடு ஒட்டி உறவாடும்
ஆணவத்தை கத்தி சொல்கிறது
என்று பொறாமை கொள்ளும்
என் மனதை எதை கொண்டு
கட்டி போடுவது . .!!
முதல் முதலாய்
அறியாமல் நீ என் ஸ்பரிசம்
தொட்ட நொடி . .
கண் இமைக்கும் நொடிகளில்
நீ பதித்த முதல் முத்தம் . .
உன்னுடன் நினைந்த முதல் மழை . .
முதல் காதல் பார்வை . .
கடல் அலையையும் காதலையும்
ஒன்றாக ரசித்த நிமிடங்கள் . .
கை பிடித்து ஒட்டி
நடந்த மாலை வேளை . .
இதை நினைத்து பார்க்க
தடையில்லை என் கனவுகளில் . .!!
காதல் உண்டு
கனவுகள் உண்டு
ஆசைகள் உண்டு
எதிர்பார்ப்புகள் உண்டு
உன்னோடு நான் வாழும் வாழ்க்கை
மட்டும் இல்லை . .
ஏன் . .
ஜாதிகளோடு மூச்சை விடும்
இந்த சராசரி மக்கள் கூட்டத்தில்
என்னையும் திணித்து
என் காதலை அதுக்கு இரையாக்கிய
கடவுளை எந்த காவலாளி
கொண்டு பிடித்து
எந்த சிறையில் அடைப்பேன் . .!!


