Thursday, 30 November 2017

இரையான என் காதல்

நான் உனதல்ல 

நீ  எனதல்ல 

ஆயினும் ஏன் இந்த போராட்டம் . . . !!


வ்வொரு முறையும் 

உன் பெயரையே கிறுக்கி பழகிய 

என் பேனா நுனி சொல்லும் 

உன்  பெயரின் எழுத்துக்களை மனப்பாடமாய் . .!!


ன் தலையனை கணம் சொல்லும் 

தினம் இரவில்  நான் சிந்தும் 

கண்ணீரின் ஆழத்தை . .!!


நான் அல்லாமல் 

நீ மற்ற பெண்ணிடம் பேசும் தருவாயில் 

கோபத்தை பொறுக்க முடியாமல் 

இடிபடும் என் பற்கள் 

சொல்லும் ஓராயிரம் கதைகள் . .!!


ன் சுயமறியாதையை  விற்று 

ஒவ்வொரு சண்டையிலும் 

 வாக்குவாதங்களிலும்  

முதலில்  மன்றாடி 

உன்னை எனக்காய்  பெரும் தருணத்தில் 

கண்ணீர் மல்க துடிக்கும் 

என் உதடுகள் சொல்லும் 

அதுபோல் கடந்து வந்த 

ஆயிரம் தருணங்களை . .!!






ன் கை அசைவில் 

உன் கை காப்பு சிணுங்கயில் 

அது உன்னோடு ஒட்டி  உறவாடும் 

ஆணவத்தை கத்தி சொல்கிறது 

என்று பொறாமை கொள்ளும் 

என் மனதை எதை கொண்டு 

கட்டி போடுவது . .!!


முதல் முதலாய் 

அறியாமல் நீ என் ஸ்பரிசம் 

தொட்ட நொடி . .

கண் இமைக்கும் நொடிகளில் 

நீ பதித்த முதல் முத்தம் . .

உன்னுடன் நினைந்த முதல் மழை . .

முதல் காதல் பார்வை . .

கடல் அலையையும் காதலையும் 

ஒன்றாக ரசித்த நிமிடங்கள்  . .

கை பிடித்து ஒட்டி 

நடந்த மாலை வேளை . .

இதை நினைத்து பார்க்க 

தடையில்லை என் கனவுகளில் . .!!


காதல் உண்டு 

கனவுகள் உண்டு 

ஆசைகள் உண்டு 

எதிர்பார்ப்புகள் உண்டு 

உன்னோடு நான் வாழும் வாழ்க்கை 

மட்டும் இல்லை . .

ஏன் . .

ஜாதிகளோடு மூச்சை விடும் 

இந்த சராசரி மக்கள் கூட்டத்தில் 

என்னையும் திணித்து 

என் காதலை அதுக்கு இரையாக்கிய 

கடவுளை எந்த காவலாளி 

கொண்டு பிடித்து 

எந்த சிறையில் அடைப்பேன் . .!!

Monday, 5 June 2017

ஓர் பேருந்து !!


bus

 

"ப்பா கிளம்பறேன்" . .
என்று பேருந்தின்  ஜன்னல் வழியே
கை அசைத்து அவர் மறைந்த வேளை . .
அப்பா . . நீயும் வா  என்று அலறி துடித்து . .
அம்மாவின் மடியிலிருந்து துள்ளி எழுந்து
கதறி அழுத மழலையின் ஆழ்ந்த அன்பு . .


நாளை எண்ணி கவலை கொண்டு . .
புலம்பலும் . .வாழ்க்கையின்  கசப்பை பிணாற்றியபடி . .
கை நிறைய மாத்திரைகளை
விழுங்கும் பாட்டி . .

லகமே இடிந்தாலும் . .
தனக்கென என்று வெறுமையில் . .
கைபேசியினில்  கண் புதைத்தும் . .
செவியினுள்ளே இசையை பூட்டி சிறை வைத்தும் . .
சில பேர் . .

குழந்தைக்கு மூச்சடைக்கும்
அழுகையை நிறுத்த ஏதாவது செய்யேன்  மா . .
என்று அக்கறையோடும் . . மனிதாபிமானத்தோடும்  ஒருவர் . .

ந்த பேருந்து
எப்பொழுது போயி சேரும் . .
என்று நேரத்தை தொரத்தியபடி
மடிக்கணினியில் மூழ்கி
இயந்திர வாழ்க்கையில் பிணைப்பட்ட ஒருவர் . .

விடுமுறைக்காக ஏங்கிய  நாட்களை கடந்து . .
இன்றைக்கு ஆசைகளையும் ஆர்வத்தையும்
சுமந்து சென்று . .
விடுமுறைக்கு பின்  . .
நினைவுகளை சுமந்து வரும்
இதேபோன்ற பயணத்தை எண்ணி கவலையில் நான் . .

வ்வொரு பேருந்தும்
சுமப்பது மனிதர்களை மட்டும் அல்ல . .
பல  மனதிர்களின் என்ன ஓட்டங்களையும்
நினைவுகளையும் தான் . . !!!!

Thursday, 9 February 2017

நீ தான் . . . !!


தினமும் காலையில்

கண் விழித்திடும் வேளையில்

உணர்ந்திடும் சோம்பல் நீ தான் . .!


பேருந்திற்கு நடக்கும் பாதையில்

தினமும் பார்த்திடும்

மழலை சிரிப்பு நீ தான் . . !


செவிசிறையினில் அகப்பட்டு

முழங்கிடும் அத்தனை

பாடல் வரிகளின்

அர்த்தமும் நீ தான் . . !


யிரிழையினை உரசி

தேகம் சிலிர்த்திடும்

தென்றல் காற்றும் நீ தான் . . !


டைமழை முன்பு

எழும் மண்வாசனை

நினைவு கூர்வது நீ தான் . . !


டல் அலைகளின் ஆரவாரத்தை

தூரம் நின்று ரசித்திடும்

அந்திமாலை சூரியனும் நீ தான் . . !


ண் அசரும் இரவுவேளை

நினைவுகளால் கட்டி அணைக்கப்படும்

என் தலையணையும் நீ தான் . . !


கேளியில் புன்னகையாகவும்

நீ இல்லா வேளையில் கண்ணீராகவும்

வெளிப்படுவது நீ தான் . . !


ன் பெண்மையை உணரச்செய்யும் நளினமும்

என் பெண்மையால் வெளிப்படும்

நாணமும்  நீ தான் . . !


நான் எழுதும் கவிதையில்

எழும் கற்பனை

யாவும் நீ தான் . . !


பொறித்திடும் நாட்குறிப்பில்

எழுதும் வார்த்தைகளில்

நினைவு கூர்வும் நினைவுகளில்

என்று யாவிலும் நீ தான் . .

நீ தான் . . !