Thursday, 30 November 2017

இரையான என் காதல்

நான் உனதல்ல 

நீ  எனதல்ல 

ஆயினும் ஏன் இந்த போராட்டம் . . . !!


வ்வொரு முறையும் 

உன் பெயரையே கிறுக்கி பழகிய 

என் பேனா நுனி சொல்லும் 

உன்  பெயரின் எழுத்துக்களை மனப்பாடமாய் . .!!


ன் தலையனை கணம் சொல்லும் 

தினம் இரவில்  நான் சிந்தும் 

கண்ணீரின் ஆழத்தை . .!!


நான் அல்லாமல் 

நீ மற்ற பெண்ணிடம் பேசும் தருவாயில் 

கோபத்தை பொறுக்க முடியாமல் 

இடிபடும் என் பற்கள் 

சொல்லும் ஓராயிரம் கதைகள் . .!!


ன் சுயமறியாதையை  விற்று 

ஒவ்வொரு சண்டையிலும் 

 வாக்குவாதங்களிலும்  

முதலில்  மன்றாடி 

உன்னை எனக்காய்  பெரும் தருணத்தில் 

கண்ணீர் மல்க துடிக்கும் 

என் உதடுகள் சொல்லும் 

அதுபோல் கடந்து வந்த 

ஆயிரம் தருணங்களை . .!!






ன் கை அசைவில் 

உன் கை காப்பு சிணுங்கயில் 

அது உன்னோடு ஒட்டி  உறவாடும் 

ஆணவத்தை கத்தி சொல்கிறது 

என்று பொறாமை கொள்ளும் 

என் மனதை எதை கொண்டு 

கட்டி போடுவது . .!!


முதல் முதலாய் 

அறியாமல் நீ என் ஸ்பரிசம் 

தொட்ட நொடி . .

கண் இமைக்கும் நொடிகளில் 

நீ பதித்த முதல் முத்தம் . .

உன்னுடன் நினைந்த முதல் மழை . .

முதல் காதல் பார்வை . .

கடல் அலையையும் காதலையும் 

ஒன்றாக ரசித்த நிமிடங்கள்  . .

கை பிடித்து ஒட்டி 

நடந்த மாலை வேளை . .

இதை நினைத்து பார்க்க 

தடையில்லை என் கனவுகளில் . .!!


காதல் உண்டு 

கனவுகள் உண்டு 

ஆசைகள் உண்டு 

எதிர்பார்ப்புகள் உண்டு 

உன்னோடு நான் வாழும் வாழ்க்கை 

மட்டும் இல்லை . .

ஏன் . .

ஜாதிகளோடு மூச்சை விடும் 

இந்த சராசரி மக்கள் கூட்டத்தில் 

என்னையும் திணித்து 

என் காதலை அதுக்கு இரையாக்கிய 

கடவுளை எந்த காவலாளி 

கொண்டு பிடித்து 

எந்த சிறையில் அடைப்பேன் . .!!