விடியற்காலை..!
மாடுகளின் மணிச்சத்தம்...
தொலைவில் யாரோ பெருக்கிக்கொண்டிருக்கும்
சரக்..சரக்..
எரியாத தெருவிளக்கின்
மினுக்..மினுக்...
உதிர்ந்துகிடக்கும்
பவழமல்லி...
தேநீர்வாளியுடன்
முண்டாசுத்தாத்தா..
மிளகுப்பொங்கல்கையுடன்
நண்டுசிண்டுகள்
தாழ்வாகப்பறந்துசெல்லும்
காகங்களின் சிறகொலி...
தூரத்தேயொலிக்கும்
கற்பனையென்றாலும் கற்சிலையென்றாலும்..
ஆம்!
விடியற்காலை அழகுதான்!
மார்கழிமாதவிடியற்காலைமட்டும்
பேரழகு!
