சுற்றுகின்ற உன்னை
சுற்றி சுற்றி
வருகின்றேன் நித்தமும் . . .
பகலினில் கள்வனாய்
இரவில் காதலியாய் . . .
மலரின் வாசனையை
அறியாமல் கடத்தும்
காற்றை போல் . . .
இதயத்தை அறியாமல்
கவர்ந்த கள்வன் நீ . . .
திருடியது நீ
தண்டனை எனக்கல்லவோ . . .
என்னை அனுமதிக்காத நீ
உன் தேகம் தீண்ட
காற்றை மட்டும்
ஏன் அனுமதிக்கிறாய் ????
கோடி தலைகளுக்கு
அடைக்கலம் தருகிற உனக்கு
என்னை திரும்பி பார்த்திட
நேரமில்லையா ????
நீ திரும்பி
பார்த்திடும் ஒரு பார்வைக்காக
யுகமாக நான் நிலுவையில் . . .
நூற்றாண்டாய் என் காதலோடு
காத்திருக்கும் என்னை
நீ கைபிடிக்கும் வேலையை எண்ணி
இன்றும் இந்த இரவில்
வெளியே நான் . . . !!!!
-நிலாவின் காதல்
பூமியின் மீது -

No comments:
Post a Comment