என் குறும்பை காட்டிட
அருகே தங்கை இல்லை . . .
நாட்டு நடப்பினை
விவாதம் வைத்திட
பக்கம் தந்தை இல்லை . . .
நான் சொல்லாமலே
என் எண்ணங்களை படித்திட
நான் அன்னை மடியில் இல்லை . . .
விடுமுறையன்று சுற்றிட
என் நண்பர்கள் இல்லை . . .
என்னை கட்டித்தழுவிடும்
தலையணையும்
நான் முத்தமிடும்
என் கனவுகளும் இங்கில்லை . . .
நாள்தோறும் இயங்கும்
இயந்திரமாய் இங்கு நான் . . .
என்னுடன் யாரும் இல்லை
என்று நினைத்து நிமிரும் வேலையில் . . .
அன்று நான் என் வீட்டில்
பார்த்த அதே பொலிவுடன் துணைக்கு
என்னுடன் இங்கு வந்திருக்கும் நிலா . . . !!!!!!!

அ௫மை வென்னிலா
ReplyDeleteIndhu super...i understood ur feelings..
ReplyDelete